⇰ To Index Page

Vani Saraswathi Songs

BhAathiyAr to Saraswathi, the Goddess of Learning

வெள்ளைக் கலைஉடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியா சனத்தில் அரசரேடு என்னைச் சரியாசனம்வைத்த தாய். ..

வெள்ளைத் தாமரைப் பூ வி லிருப்பாள்
வீணை செய்யு மொலியி லிருப்பாள்.....
வீடுதோறுங் கலையின் விளக்கம்
வீதிதோறு மிரண்டொரு பள்ளி
நாடு முற்றிலு முள்ளன வூ ர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ருரைத்
தீயினுக் கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கு மமுதெமெ னன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் (வெள்ளைத்)
நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்
ஆண்மையாள ருழைப்பினை நல்கீர்
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்
எதுவு நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுதும் வாரீர்.

மாணிக்க வீணை

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

Kalaivani கலைவாணி

கலைவாணி நின் கருணை தேன் மழையே
கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
(கலைவாணி)
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி
(கலைவாணி)
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்
(கலைவாணி)
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்
(கலைவாணி)

vanor vanankum வானோர் வணங்கு மனையே

ராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி
பல்லவி
வானோர் வணங்கு மனையே-பஜிக்க அருள்
வாக்குத் தந்தாள் என்றனையே மனமிரங்கி (வானோர்)
அனுபல்லவி
கானம் செய்து உன் அருள் ஸம்மானம் விழையும் இந்த
தீனன் எனதபீஷட-தானம் செய்தருள் வந்து (வானோர்)
சரணம்
வாணீ மணமலர்க்கொள் வேணீ குயில் பழிக்கும்
வாணீ மஞ்ஜுள சுக பாணீ சதுர்முகன் தன்
ராணீ நயனமதி லேணீ ஸமானையாம் கல்-
யாணீ வேதபுஸதக பாணீ இந்திரன் முதல் (வானோர்)
தேனும் கசக்க வீணா கானம் செய்யும் ஞான-வி
ஞான தன சுக நிதானி அன்னவாகனி
நானினத்தில் நீ தரும் ஞானக் கண்ணாலல திவ்
வூனக்கண்ணால் மனிதர்க் கான பயன் உளதோ (வானோர்)
அம்பா அகிலஜக தம்பா உனை இதயம்
நம்பாத உன்னருள் விரும்பாத எனது பெ-
ரும்பாதகம் தொலைக்கச் செம்பாகமாய்த் துதி தொ-
ழும்பார் ராமதாஸன் தொழும் பாவன சரித்ரி (வானோர்)
Nara Contact terms